லூக்கா

ஸ்திரீயே, உன்பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய்  லூக்கா 13:12  தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.  லூக்கா 14:11  தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.   லூக்கா 14:27  அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.  லூக்கா 14:33 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.   லூக்கா 16:10  எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.   லூக்கா 16:13   உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள், அவன் மனஸ்தாபப்பட்டால்...

மாற்கு

 காலம் நிறைவேறிற்று,தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று,மனந்திரும்பி,சுவிசேஷத்தை விசுவாசியுங்கள். 

 மாற்கு 1:15


இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். 

 மாற்கு 1:41  


இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு,திமிர்வாதக்காரனை நோக்கி,மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். 

 மாற்கு 2:5


நீ எழுந்து,உன் படுக்கையை எடுத்துக்கொண்டு,உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.  

மாற்கு 2:11


இயேசு அதைக் கேட்டு,பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை, நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். 

 மாற்கு 2:17  


தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும்,எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார். 

 மாற்கு 3:35  


எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும், கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும். 

 மாற்கு 4:24 


அவர் எழுந்து, காற்றை அதட்டி,கடலைப்பார்த்து, இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. 

 மாற்கு 4:39  


அவர் அவளைப் பார்த்து,மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது,நீ சமாதானத்தோடேபோய்,உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார், 

 மாற்கு 5:34 


பயப்படாதே,விசுவாசமுள்ளவனாயிரு 

மாற்கு 5:36 


பிள்ளையின் கையைப் பிடித்து, தலீத்தாகூமி என்றார், அதற்கு,சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம். 

 மாற்கு 5:41  

























Comments

Popular posts from this blog

லூக்கா

மாற்கு